தேசிய செய்திகள்

மார்த்தட்டும் முன் 8-10 சதவீத வளர்ச்சியை இந்தியா அடையட்டும் - ரகுராம் ராஜன்

அடுத்த பத்தாண்டுகளுக்கு 8-10 சதவீத வளர்ச்சியை அடைந்து விட்டு மார்த்தட்ட வேண்டும் என்றார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.

தினத்தந்தி

புதுடெல்லி

இந்தியா வளர்ச்சி குறித்து பிரசங்கம் செய்ய வேண்டுமென்றால் 10 ஆண்டுகளுக்கு 8-10 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டும். தொடர்ச்சியாக வளர்ச்சி விகிதம் வீழ்ந்து வருவதால் நமக்கு எச்சரிக்கை வேண்டும் என்றார் அவர். 1990 கள் முதல் 6-8 சதவீத வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்கு பெற்றோம் என்றால் பெரியதொரு பொருளாதாரமாக இருப்போம். நாம் 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிறியதொரு பொருளாதாரம். ஆனால் நாம் பெரிய நாடாக எண்ணுகிறோம். சீனா இந்தியாவை விட ஐந்து மடங்கு பெரியது.

பத்தாண்டுகளுக்கு பெரிய வளர்ச்சியை நாம் பெற்றால்தான் உலக மக்கள் நம்மை ஏறிட்டு பார்ப்பார்கள் என்றார் ரகுராம் ராஜன்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை