தேசிய செய்திகள்

ஆடிக்கிருத்திகையில் முருகப்பெருமானின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம் - பிரதமர் மோடி

ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT