தேசிய செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் தலைவா டி.கே.சிவக்குமாருடன் மது பங்காரப்பா சந்திப்பு; காங்கிரசை பலப்படுத்த பாடுபடுவேன் என பேட்டி

கர்நாடக காங்கிரஸ் தலைவா டி.கே.சிவக்குமாரை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வான மது பங்காரப்பாவை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

இந்த சந்திப்புக்கு பிறகு மதுபங்காரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டி.கே.சிவக்குமார், எங்கள் தந்தை பங்காரப்பாவுக்கு ஆதரவாக பணியாற்றினார். காங்கிரசில் சேரும்படி டி.கே.சிவக்குமார் தொடர்ந்து என்னிடம் கூறி வந்தார். நான் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளேன். அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நான் பாடுபடுவேன்.

எனது சகோதரி கீதா சிவராஜ்குமாரும் காங்கிரசில் சேருவார். குமாரசாமி எனது சகோதரரை போன்றவர். அவரை நான் விமர்சிக்க மாட்டேன். கடந்த 10 ஆண்டுகளில் என்னென்ன நடந்தது என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்.

இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.

அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் கூறும்போது, "காங்கிரசில் என்னை அடையாளம் கண்டு வளர்த்தவர் பங்காரப்பா. காங்கிரஸ் கடலை போன்றது. எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் இந்த விஷயத்தில் அறிவுரை வழங்கினர்" என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்