தேசிய செய்திகள்

மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி

மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் வெற்றி பெற்றார்.

தினத்தந்தி

சிந்த்வாரா,

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அவர் சட்டசபை உறுப்பினராக தேர்வாகவில்லை. இதனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடந்த சிந்த்வாரா சட்டசபை தொகுதியில் இவர் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து பா.ஜ.க.வின் விவேக் பன்டி சாஹு போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், சாஹுவை 25 ஆயிரத்து 837 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கமல்நாத் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோன்று கமல்நாத்தின் மகன் நகுல் நாத் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்த்வாரா மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ.க.வின் நாதன்சஹா கவரேட்டி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில், 37 ஆயிரத்து 536 வாக்குகள் வித்தியாசத்தில் நகுல் நாத் வெற்றி பெற்றுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு