கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்ட செயல்பாடுகளில் மராட்டியம் முதலிடம் - நிதி ஆயோக் தகவல்

மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்ட செயல்பாடுகளில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்காக மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு 'போஷான் அபியான்' என்ற பெயரில் மாபெரும் திட்டத்தை தொடங்கியது.

இந்த திட்டத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்தும் விதம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை அளித்து உள்ளது.

அதன்படி இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பெரிய மாநிலங்களில் மராட்டியம் முதலிடத்தை பிடித்து உள்ளது. ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 19 பெரிய மாநிலங்களில் 12-ல் 70 சதவீதத்துக்கும் அதிகான பணிகள் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

சிறிய மாநிலங்களை பொறுத்தவரை சிக்கிம் முதலிடத்தில் உள்ளது.

17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே 12 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக நோய்த்தடுப்பு மருந்து பெற்றுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளே முழு நோய்த்தடுப்பு பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு