தேசிய செய்திகள்

மராட்டிய அரசு கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தாயாராகி வருகிறது - மந்திரி ராஜேந்திர சிங்கே

மராட்டியத்தில் கொரோனா 3-வது அலைக்கு 50 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என மந்திரி ராஜேந்திர சிங்கே தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பதிக்கப்பட்டு உள்ள மாநிலம் மராட்டியமாகும். குறிப்பாக கொரோனா 2-வது அலை மராட்டியத்தை புரட்டி போட்டது. ஆக்சிஜன், மருந்து பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகளால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.

இந்தநிலையில் 3-வது அலையால் 5 லட்சம் குழந்தைகள் உள்பட 50 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மந்திரி ராஜேந்திர சிங்கே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

புல்தானாவில் நிருபர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:-

கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும் சமயத்தில் மாநிலம் முழுவதும் 8 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்க வாய்ப்புள்ளது. சுமார் 5 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவார்கள். இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இந்த வாரம் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மராட்டிய அரசு சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், போதுமான மருந்துகளை இருப்பில் வைப்பதின் மூலமும், குழந்தை மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தயாராக வைப்பத்தின் மூலமாகவும் 3-வது அலையை எதிர்கொள்ள தாயாராகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு