தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம்: பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யின் கார் மீது கல்வீசி தாக்குதல்

பா.ஜ.க. முன்னாள் எம்.பி. நிலேஷ் ராணேவின் கார் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் ரத்னகிரி பகுதியில் உள்ள சிப்லுன் என்ற இடத்தில், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி ஆதரவாளர்களுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. நிலேஷ் ராணே தனது காரில் குஹாகர் பகுதியில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், நிலேஷ் ராணேவின் கார் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பா.ஜ.க. மற்றும் சிவசேனா ஆதரவாளர்களிடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்தது. இதில் மேலும் சில வாகனங்கள் சேதமடைந்தன. இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்