தேசிய செய்திகள்

அதீத பக்தி யானை சிலைக்கு அடியில் படுத்து வழிபாடு செய்தபோது, சிக்கிக்கொண்ட இளைஞர்

டுவிட்டர் பயனாளர் நிதின் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது 1.80 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

தினத்தந்தி

அகமதாபாத்

குஜராத்தில் அதீத பக்தியால் ஒருவர் யானை சிலைக்கு அடியில் படுத்து வழிபாடு செய்தபோது சிக்கிக்கொண்டார்.

குஜராத்தில் உள்ள கோவிலில் பக்தர் ஒருவர் யானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்டார். பக்தரின் போராட்டும் வீடியோவும், அவரை விடுவிக்க அருகில் இருந்தவர்கள் முயற்சியும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் எப்போது நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் பக்தர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

டுவிட்டர் பயனாளர் நிதின் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது 1.80 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோவில் ஒரு பக்தர் சிலையின் அடியில் படுத்துக் கொண்டு, கை, கால்களைப் பயன்படுத்தி சக்தியைப் பிரயோகித்து அதன் வழியாகச் வெளியேற முயல்கிறார். ஆனால், அவரால் முடியவில்லை. அவரைச் சுற்றிலும் பலர் சூழ்ந்துள்ளனர். கோவில் பூசாரியும் அந்த நபருக்கு உதவுகிறார் ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை