தேசிய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை

பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு

கர்நாடகா மாநிலத்தில் சிறுநீரக பிரச்சினை காரணமாக 50 வயது நபர், கடும் சுவாச கோளாறுடன் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT