தேசிய செய்திகள்

எனது இறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டது: நாளிதழில் வெளியான வினோத விளம்பரம்

ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது டுவிட்டரில் பகிர்ந்து, இந்தியாவில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும் என்று நகைச்சுவைவாயாக பதிவிட்டுள்ளார்

தினத்தந்தி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், நாளிதழ் ஒன்றில் வெளியான விளம்பரம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ரஞ்சித்குமார் என்பவர் பெயரில் வெளியான அந்த விளம்பரத்தில், எனது இறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி தொலைந்துவிட்டதாகவும் சான்றிதழ் எண்ணும் பகிரப்பட்டுள்ளது.

இதை ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது டுவிட்டரில் பகிர்ந்து, இந்தியாவில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும் என்று நகைச்சுவைவாயாக பதிவிட்டுள்ளார். இந்த நாளிதழ் விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது. தவறுதலாக இந்த விளம்பரம் அச்சிடப்பட்டு விட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக வெளியானதா? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு