தேசிய செய்திகள்

பா.ஜனதா தலைவர் வீட்டில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்

பீகாரில் பா.ஜனதா தலைவர் வீட்டில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பீகார் மாநிலம் மகாத் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் கயாவில் பா.ஜனதா தலைவர் அனுஜ் குமார் வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சுமார் 20-30 நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் வந்து அவரது வீட்டில் வெடிகுண்டை வீசியுள்ளனர். இதனால் வீடு சேதம் அடைந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற போது அங்கு யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் நேரிடவில்லை. கிராமப்புற மக்களை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மாவோயிஸ்டுகள், மீறினால் விளைவுகளை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும் என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...