கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் போலீஸ்காரர் நக்சலைட்டுகளால் கடத்திக்கொலை

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளால் போலீஸ்காரர் ஒருவர் கடத்திக்கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

பிஜாப்பூர்,

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தின் பொண்டும் கிராமத்தை சேர்ந்தவர் சன்னு புனெம். போலீஸ்காரரான இவர் சங்கலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இவர் விடுப்பு எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். மாலையில் அங்கு வந்த நக்சலைட்டுகள் சிலர், போலீஸ்காரர் சன்னு புனெத்தை கடத்தி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை தேடி வந்தனர்.

ஆனால் நேற்று காலையில் அருகில் உள்ள கேஷ்குதுல் கிராமத்தில் ஒரு சிற்றாறு அருகே சன்னு புனெம் பிணமாக கிடந்தார். அவரை கூர்மையான ஆயுதங்களால் நக்சலைட்டுகள் கொலை செய்துவிட்டு அங்கே போட்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் போலீஸ்காரர் சன்னு புனெத்தை கடத்தி கொலை செய்த நக்சலைட்டுகளை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு