தேசிய செய்திகள்

மராட்டியம்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து: 9 பேர் காயம்

மராட்டிய மாநிலத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் கிழக்கு பந்த்ரா பகுதியில் 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கட்டிட விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட ஒரு நபர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் நலமாக இருக்கின்றனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ ஷீசன் சித்திக், போலீசாருடன் விபத்து நடந்த பகுதியில் தான் இருப்பதாகவும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தன்னுடைய டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு