தேசிய செய்திகள்

மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து

மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை,

மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் குறித்து விரைந்து வந்த 17 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தீ விபத்தில் ரெயில் சேவை பாதிப்பு இல்லை என்ற கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.