தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க 3 நாட்கள் ஆகும் என அருணாச்சல பிரதேச மாநில அரசு கூறியுள்ளது.

தினத்தந்தி

இட்டாநகர்,

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சீனாவின் எல்லையோர மாவட்டமான திபாங் பள்ளத்தாக்குடனான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சாலையை சீரமைக்க 3 நாட்கள் ஆகும் என அருணாச்சல பிரதேச மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை துண்டிப்பால் தற்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்