புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. அங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
டெல்லியில் கொரோனா பரவல் குறையத்தொடங்கி இருந்தாலும், தற்போதும் அங்கு ஏராளமானோர் தினமும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி வருகிற 17-ந்தேதி அதிகாலை வரை இந்த ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். இந்த நாட்களில் மெட்ரோ ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதைப்போல திருமணங்களை வீடுகளில் அதிகபட்சமாக 20 பேருடன் நடத்திக்கொள்ள வேண்டும் எனவும் பொது இடங்களில் திருமணங்களுக்கு தடை விதிப்பதாகவும் அவர் அறிவித்தார்.