ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்ட பகுதியில் நேற்று அதிகாலை 5.27 மணி யளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.4 அலகுகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி வன்ஸ்தா நகருக்கு கிழக்கு-தென்கிழக்கே 22 கி.மீ தொலைவில் நிலப்பரப் பிற்கு அடியில் மையம் கொண்டிருந்தது.
அதிகாலையில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.