புதுடெல்லி,
அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்கின்றன. இதை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக போர்ட் பிளேருக்கு சென்றார்.
அங்கு நீரிலும், நிலத்திலும், வானிலும் வீரர்கள் நிகழ்த்தும் சாகசங்களை அவர் பார்வையிட உள்ளார். மேலும் அவர் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளையும் திறந்து வைக்கிறார்.