தேசிய செய்திகள்

எம்.ஜே அக்பர் தொடுத்த அவதூறு வழக்கின் விசாரணை அக்.31 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள எம்.ஜே அக்பர் தொடுத்த அவதூறு வழக்கின் விசாரணை அக்.31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை #மீ டூ ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும்ன் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமாக இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர். அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், உள்ளிட்ட பலர் அடங்குவர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எம்.ஜே அக்பரை விமர்சித்தன. அக்பர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் கடும் நெருக்கடியும், தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து, எம்.ஜே அக்பர் இணை அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இதற்கிடையில், பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு எம்.ஜே.அக்பர் தொடுத்தார். இந்த அவதூறு வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. எம்.ஜே அக்பர் மீதான வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் அக்.31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம், எம்.ஜே அக்பர் உள்ளிட்டோர் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்