இம்பால்,
மணிப்பூரின் இந்திய-மியான்மர் எல்லைப்பகுதியின் அருகே இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.37 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அனைவரும் வெளியே தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.