Image Courtesy : PTI 
தேசிய செய்திகள்

மோடி பதவியேற்பு விழா: ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். டெல்லியில் வரும் 9-ந்தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த சுரேகா யாதவ், கடந்த 1988-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநராக தனது பணியை தொடங்கினார்.

இவரது சாதனைகளுக்காக பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையையும் சுரேகா யாதவ் பெற்றுள்ளார். தற்போது இவர் மராட்டிய மாநிலம் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் மற்றும் சோலாபூர் இடையிலான வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயிலை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து