புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று பூர்வாஞ்சல் விரைவு சாலையை திறந்து வைத்தார். அதற்காக போர் விமானத்தில் வந்து அந்த சாலையில் தரை இறங்கினார். அதைத்தொடர்ந்து, இந்திய விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதை சுட்டிக்காட்டி, பா.ஜனதாவில் முன்பு இருந்தவரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்கா, மோடியை கிண்டல் செய்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இனிமேல் உத்தரபிரதேசத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வரும்போதெல்லாம், குடியரசு தின அணிவகுப்பு பாணியில் ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். விமானப்படை விமானங்கள் சாகசம் நிகழ்த்த வேண்டும். இவை அனைத்தும் அரசு செலவில் நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.