புதுடெல்லி
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தெடர் வரும் 18-ஆம் தேதி தெடங்குகிறது. இந்த கூட்டத்தெடரில் நிறைவேற்றப்பட உள்ள மசேதாக்களின் பட்டியல் தற்பேது வெளியாகி உள்ளது. முக்கியமாக தமிழகம் எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசேதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதை தவிர, பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவேரின் தண்டனையை அதிகப்படுத்துவது, தனியார் நிதி நிறுவன முறைகேடுகளை தடுப்பது, மனித உரிமை ஆணையத்தின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் என்பன உள்பட 18 மசேதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
பிரதமர் மோடியின், தற்போதைய ஆட்சி காலத்தில் நடைபெறும் கடைசி மழைக்கால கூட்டத்தொடர் இது என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்த மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் என தெரிகிறது.
அணை பாதுகாப்பு மசேதாவிற்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.