தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனயை அதிகரிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

சராசரியாக இந்தியா முழுவதும் ஒருநாளைக்கு 1,50,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. தலைநகர் டெல்லியில் ஒருநாளைக்கு 5,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, ஒருநாளைக்கு 18,000 முதல் 20,000 பரிசோதனைகள் வரை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நேற்று 2,15,195 பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 73,52,911 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்