தேசிய செய்திகள்

நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் - பீகாரில் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பீகார் தேர்தல் புள்ளிவிவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதன்படி பீகாரில் நடந்த 3 கட்ட தேர்தலில் 4 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்கு அளித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.3 கோடி ஆகும்.

பீகார் சட்டசபை தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்கும் வகையில் நோட்டாவுக்கு 7 லட்சத்து 6 ஆயிரத்து 252 வாக்குகள் விழுந்துள்ளன. இது 1.7 சதவீதம் ஆகும். பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டா வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல் அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்