தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாகசம்; 5 பேர் கைது

சிக்கமகளூருவில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் வீட்டுவசதி குடியிருப்பு சாலையில் சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அதேப்பகுதியில் 5 பேர் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேர் மீதும் சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்