தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல் வாலிபர் சாவு

மைசூரு அருகே மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பாதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

மைசூரு

மைசூரு (மாவட்டம்) தாலுகா தொட்டமாறகவுடன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி கவுடா (வயது32). அதேப்பகுதியை சேர்ந்தவர்கள் மஞ்சுநாத் (35), குமார் (33). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

இந்தநிலையில் இவர்கள் 3 பேரும் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா பகுதியில் உள்ள அகல்யா தேவி கோவிலுக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். சாமி தரிசனம் செய்த பின்னர் அவர்கள் 3 பேரும் மைசூருவுக்கு வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் கூறுஹள்ளி அருகே உள்ள தொழிற்சாலை அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுவாமி கவுடா பரிதாபமாக இறந்தார்.

மஞ்சுநாத், குமார் ஆகிய 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து