தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிவது அவசியம்

சிவமொக்காவில் வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிவது அவசியம் என போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் அறிவுரை கூறினார்.

தினத்தந்தி

சிவமொக்கா :-

சிவமொக்கா(மாவட்டம்) டவுனில் நேற்று முன்தினம் மாலையில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோபி சதுக்கத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், சிவமொக்கா துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமலும், தரமானதாக இல்லாமலும், பாதியளவு தலையை மட்டும் மறைத்திருக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்து எச்சரித்தனர்.

அப்போது அந்த வாகன ஓட்டிகளிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் கூறுகையில், 'ஹெல்மெட் அணிவது வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாப்பதற்காக தான். அதனால் தரமான ஹெல்மெட்களை அணிவது அவசியம்.

மேலும் பாதுகாப்பற்ற ஹெல்மெட்களை யாரும் அணியக்கூடாது' என்று கூறினார். மேலும் அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ஹெல்மெட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு