தேசிய செய்திகள்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்; தேடப்பட்ட சலீம் மரணம்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளரான சலீம் மரணம் அடைந்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் 1993ம் ஆண்டு மார்ச் 12ந்தேதி திடீரென அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனால் நகரமே குலுங்கின. இந்த சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் சலீம் காஜி. நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ஷகீலின் நெருங்கிய உதவியாளராக இருந்து வந்துள்ளார்.

மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சலீம், இந்தியாவில்இருந்து தப்பி பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சலீமுக்கு கடந்த சில நாட்கனாக, உடல்நல குறைவு ஏற்பட்டது. அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளன.

அவர் இருதயம் சார்ந்த பாதிப்புகளால் இன்று உயிரிழந்து உள்ளார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த யூசுப் மேமன் கடந்த ஆண்டு நாசிக் மத்திய சிறையில் உயிரிழந்து உள்ளார். மற்றொரு தேடப்படும் குற்றவாளியான முஸ்தபா தோசா கடந்த 2017ம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு