தேசிய செய்திகள்

மும்பை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் முன்பதிவு நாளை தொடக்கம்

மும்பை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை- நாகர்கோவில் இடையே வருகிற 7-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ரெயில்(வண்டி எண்: 06430) வரும் 7-ந்தேதி முதல் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் காலை 6 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. வந்தடையும்.

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில் 8-ந் தேதி முதல் செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இரவு 8.35 மணிக்கு சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்பட்டு 3-வது நாள் காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இதில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரெயிலுக்கான (06339) முன்பதிவு நாளை (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து