தேசிய செய்திகள்

ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை

பெங்களூருவில் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மச்சோஹள்ளி பகுதியில் ஒரு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொன்றது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர், விவரம் தெரியவில்லை. கொலை சம்பவம் குறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை