தேசிய செய்திகள்

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றிய நாள்; முஸ்லிம் பெண்களின் உரிமை தினமாக அனுசரிப்பு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆகஸ்டு 1-ந்தேதி முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது. இந்த நாள் முஸ்லிம் பெண்களின் உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று நாடு முழுவதும் இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஸ்மிரிதி இரானி, பூபிந்தர் யாதவ் ஆகியோர், முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண்கள் பலரும், முத்தலாக் தடை சட்டம் காண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இரானி, முஸ்லிம் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய சிறுபான்மை நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, தொழிலாளர் துறை அமைச்சகங்கள் இணைந்து பல்வேறு வசதிகளை வழங்கும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு