தேசிய செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா பதவி ஏற்பு: மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து

நானும், சக உறுப்பினர்களும் மாநிலங்களவையில் அவரது இருப்பை எதிர்பார்க்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி இன்று பதவி ஏற்று கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மக்களவை உறுப்பினராக 25 ஆண்டுகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நிறைவு செய்துள்ளார். இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறார் சோனியா காந்தி.

நானும், சக உறுப்பினர்களும் மாநிலங்களவையில் அவரது இருப்பை எதிர்பார்க்கிறோம்.அவரது துணிச்சலும், கண்ணியமும், எழுச்சியும் நமது நாடாளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும்.அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை