தேசிய செய்திகள்

நாகலாந்து: சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பிய 9 கைதிகள்

நாகலாந்தில் சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பி சென்ற 9 கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

மோன்,

நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில், மாவட்ட சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 9 கைதிகள் நேற்று தப்பியோடி விட்டனர் என துணை மண்டல காவல் அதிகாரி அபோங் யிம் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார்.

அவர்களில் 2 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மற்ற 7 பேர் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். கைதிகள் அனைவரும் சிறை அறையின் இரும்பு கதவை உடைத்தும் மற்றும் கைவிலங்கு சங்கிலியை உடைத்தும் சிறையில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து மோன் நகர காவல் நிலையத்தில் இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை