தேசிய செய்திகள்

நாக்பூர்-ஷீரடி இடையிலான 6 வழி விரைவுச்சாலை - டிசம்பர் 11-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

நாக்பூர்-ஷீரடி இடையே 6 வழிச்சாலையாக 520 கி.மீ. சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை-நாக்பூர் இடையே 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 701 கி.மீ. நீளத்திற்கு விரைவுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை 10 மாவட்டங்கள், 26 தாலுக மற்றும் 392 கிராமங்களை இணைக்கிறது. இதன் மூலம் நாக்பூர்-மும்பை இடையிலான பயண நேரம் 16-ல் இருந்து 8 மணி நேரமாக குறையும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மார்க்கத்தில் நாக்பூர்-ஷீரடி இடையே 6 வழிச்சாலையாக 520 கி.மீ. சாலை அமைக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்த்து இந்த சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வரும் டிசம்பர் 11-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது