தேசிய செய்திகள்

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்களை பள்ளி கூடங்களுக்கு சூட்ட பஞ்சாப் அரசு முடிவு

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்க 5 பள்ளி கூடங்களுக்கு அவர்களின் பெயர்களை சூட்ட பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

சண்டிகர்,

நாட்டை காக்கும் பணியில் தங்களது உயிரை தியாகம் செய்தவர்களை கவுரவிக்கும் வகையிலான கொள்கையை பஞ்சாப் அரசு கொண்டுள்ளது. இதுபற்றி பஞ்சாப் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டை காக்கும் பணியில் தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு நாடு எப்பொழுதும் கடன்பட்டிருக்கிறது.

அதனால் அவர்களது நினைவை என்றும் பாதுகாக்க வேண்டியது நமது உயரிய கடமையாகிறது. அவர்களுக்கு உரிய மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என பள்ளி கல்வி மந்திரி விஜய் இந்தர் சிங்லா கூறியுள்ளார் என்று தெரிவித்து உள்ளது.

இதன்படி, பதன்கோட் மாவட்டத்தில் உள்ள இரு அரசு பள்ளிகள், தார்ன் தரன், பதின்டா மற்றும் பாட்டியாலா ஆகிய மாவட்டங்களில் உள்ள தலா ஒரு அரசு பள்ளிகள் என மொத்தம் 5 பள்ளி கூடங்களின் பெயர்களை மாற்றி வீரர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை