தேசிய செய்திகள்

சுற்று சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும்; ஜனாதிபதி ராம்நாத்

சுற்று சூழலை பாதிக்காத வகையில் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட சமூக அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்தியாவில் குளிர்கால திருவிழாக்கள் வர தொடங்கி உள்ளன. டெல்லியில் உயர்ந்து வரும் மாசுபாடு அளவுகளால் மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற சூழல் முதியவர் மற்றும் குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது என கூறியுள்ளார்.

அதனால் சுற்று சூழலை பாதிக்காத வகையில் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட மக்களுக்கு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களிடையே அமைதி மற்றும் சகோதரத்துவம் பாதிக்காத வகையிலும் இந்த அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து