தேசிய செய்திகள்

கல்வி நிறுவனங்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

கல்வி நிறுவனங்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தினார்.

தினத்தந்தி

டெல்லி ஐ.ஐ.டி.யின் வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று பேசினார். அப்போது அவர் நாட்டின் கல்வி நிறுவனங்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'இந்தியா ஒரு சிறந்த திறமை குழுவை கொண்டுள்ளது. அது இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. புதிய கற்பித்தல் மற்றும் கற்றல் அளவீடுகள், கற்பித்தல் மற்றும் உள்ளடக்கத்துடன் நமது கல்வி நிறுவனங்களின் எதிர்காலத்தை தயார்படுத்த வேண்டும்' என கேட்டுக்கொண்டார். ஐ.ஐ.டி.கள் நாட்டின் பெருமிதம் எனக்கூறிய முர்மு, அவற்றின் கதைதான் சுதந்திர இந்தியாவின் கதை என்றும் தெரிவித்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை