கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

3 ஆண்டுகளுக்கு பின்னர் நேபாளம்-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை

3 ஆண்டுகளுக்கு பின்னர் நேபாளம்-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.

காத்மாண்டு,

நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சீனாவின் கிங்டாவ் விமான நிலையத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஹிமாலயா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் நேரடி விமானம் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த விமான சேவை 2020-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர் காத்மாண்டுவில் இருந்து கிங்டாவுக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. இதன்மூலம் சீனாவில் இருந்து நேபாளம் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இது பொருளாதார ஒத்துழைப்பை அதிகரித்து இருதரப்பு நட்பை ஆழப்படுத்தும் என நேபாளத்துக்கான சீன தூதர் சென் சாங் தெரிவித்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்