கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நேபாள அதிபருக்கு கொரோனா பாதிப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி

நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தினத்தந்தி

காட்மாண்டு,

நேபாள அதிபராக பித்யா தேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் திரிபுவன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அவர் கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுள்ளதால் கவலையளிக்கும் வகையிலான பிரச்சினைகள் ஏற்படாது என நம்பிக்கையும் தெரிவித்து உள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் நேற்றைய நிலவரப்படி 570 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு