தேசிய செய்திகள்

அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டிற்கு முக்கியமானவை - பிரதமர்

அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டிற்கு முக்கியமானவை என்றார் பிரதமர் மோடி.

புதுடெல்லி

அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் குடியரசுத் தலைமர், துணைத் தலைவர் ஆகிய இருவரும் பாஜகவிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள். நாளை துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே பிரதமர் பேசினார். அந்நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தகத்தையும் வெளியிட்டார். இரு பாகங்கள் அடங்கிய இப்புத்தகம் வெங்கய்யா நாயுடுவின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களின் தொகுதியாகும்.

மக்களவையில் 30 ஆண்டுகள் கழித்து ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது; 2022 ஆம் ஆண்டை இலக்காக வைத்து கணிசமான செயல்பாடுகளை தேச வளர்ச்சிக்காக பங்களிக்க இது உதவும் என்று குறிப்பிட்டார் பிரதமர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அதனை சிறப்பான முறையில் செயல்பட வைக்க வேண்டியத் தேவையுள்ளது என்றார் மோடி. அதிர்ஷ்டவசமாக வெங்கய்யா நாயுடு மாநிலங்களவையை வழிநடத்தப் போகிறார். அவருக்கு நமது ஆதரவு பாறை போன்று உறுதியுடன் இருக்க வேண்டும் என்றார் மோடி.

விழாவில் அருண் ஜெட்லி, அமித் ஷா ஆகியோரும் பங்கு பெற்றனர். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் பிரதமர் வெங்கய்யா நாயுடுவை தேர்வு செய்ததன் மூலம் நல்லதொரு வேட்பாளரை தேர்வு செய்துள்ளார் என்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்