தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய பெண் கைது

டெல்லி விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாகோசில் இருந்து தோகா வழியாக டெல்லி வந்த நைஜீரியப்பெண் ஒருவரின் உடைகளை அவர்கள் சோதித்தனர்.

அப்போது அந்த பெண் தனது பையில் சுமார் 4 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள், அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு