முசாப்பர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம் புது மாண்டி காவல் நிலையத்தில் பசுவதையில் ஈடுபட்டதாக 9 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி யோகேந்திரகுமார் கூறுகையில், கேங்க்ஸ்டர் தடுப்பு சட்டத்தின் கீழும், பசுவதைகளில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.