கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

நிபா வைரஸ் எதிரொலி: மாஹே பிராந்தியத்தில் செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

நிபா வைரஸ் எதிரொலியால் புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் செப்டம்பர் 24-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மாஹே,

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் கட்டுப்பாட்டில் உள்ள மாஹே பிராந்தியத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக பிராந்திய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஹே பிராந்தியத்திற்கு வருகிற 24-ந்தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மாஹே பிராந்தியத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பிராந்திய நிர்வாக அதிகாரி விடுமுறை அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கோழிக்கோட்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை