தேசிய செய்திகள்

மோசடி பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் மாநிலங்களுக்கும் அதிகாரம் தேவை - நிதிஷ் குமார்

மாநில காவல்துறையினரும் மோசடி பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சொத்துக்களை கைப்பற்ற அதிகாரம் வழங்க வேண்டும் என்று பிகார் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

பட்னா

மாநில காவல்துறையினர் ரூ 5 கோடி வரை மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்ற அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார் நிதிஷ். இதை தான் கடந்த 5-6 வருடங்களாக கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அதிகாரத்தை மத்திய அரசு மாநில அரசிற்கு கொடுத்தால் பலரையும் கைது செய்ய முடியும் என்றார் நிதிஷ். நான் அமலாக்கத் துறையின் அதிகாரத்தை நீர்க்கச்செய்ய வேண்டும் எனக் கேட்கவில்லை. மாநில காவல்துறைக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டால் குற்றமிழைப்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க இயலும் என்று விளக்கினார் முதல்வர் நிதிஷ் குமார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்