கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அரசியல் சூழல் மாறினால் நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பார் - பிரசாந்த் கிஷோர்

அரசியல் சூழல் மாறினால் நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைத்துள்ளார், முதல்-மந்திரி நிதிஷ் குமார்.

ஆனால் மாநிலத்தில் அரசியல் சூழல் மாறினால் பா.ஜனதாவுடன் மீண்டும் அவர் கைகோர்ப்பார் என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய போதும், ஐக்கிய ஜனதாதளத்தின் எம்.பி.யான ஹரிவன்ஷ், மாநிலங்களவை துணைத்தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள பிரசாந்த் கிஷோர், பா.ஜனதா கூட்டணியில் நிதிஷ்குமார் மீண்டும் சேர்வதற்கு ஹரிவன்ஷ்தான் வழிவகுத்து கொடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்