புதுடெல்லி,
பொது வருங்கால வைப்புநிதி (பி.பி.எப்.), தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எஸ்.சி.) போன்றவற்றுக்கான வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு அறிவிக்கிறது.
அந்தவகையில் நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டான ஜனவரி 1 முதல் வருகிற மார்ச் 31-ந்தேதி வரை பி.பி.எப்., என்.எஸ்.சி. உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்படாமல் நீடிக்கும். மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பி.பி.எப்.-க்கான வருடாந்திர வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், என்.எஸ்.சி.க்கான வட்டி விகிதம் 6.8 சதவீதமாகவும் நீடிக்கும்.