தேசிய செய்திகள்

பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

15 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளிட்டவற்றில் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைக்கவில்லை என வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய இளைஞர் விவகாரம், மத்திய விளையாட்டுத்துறை, இந்திய விளையாட்டு மேம்பாட்டு அணையம் ஆகியவற்றின் செயலாளர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட 15 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் பாலியல் புகார்களை விசாரிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு