புதுடெல்லி,
சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்பட 7 விமான நிலையங்களில், இதுதொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 43 விமானங்களிலும், 9 ஆயிரத்து 156 பயணிகளிடமும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், யாருக்கும் வைரஸ் காய்ச்சல் தாக்கவில்லை என்பது நிரூபணமானது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான் தெரிவித்தார்.