தேசிய செய்திகள்

தென் இந்தியாவில் இரண்டாவது தலைநகரை அமைக்கும் திட்டம் கிடையாது மத்திய அரசு

தென் இந்தியாவில் இரண்டாவது தலைநகரை அமைக்கும் திட்டம் கிடையாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. #Secondcapital #SouthIndia

தினத்தந்தி

புதுடெல்லி,

மக்களவையில் மத்திய அரசு அளித்து உள்ள பதிலில், தென் இந்தியாவில் இரண்டாவது தலைநகரை அமைக்கும் திட்டம் கிடையாது என கூறிஉள்ளது. தென் இந்தியாவில் (ஐதராபாத்) இரண்டாவது தலைநகரை அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் அளித்து உள்ள பதிலில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் கடந்த வாரம் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசுகையில், டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசடைந்து வருவதால் தலைநகரில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை தென் இந்தியாவிற்கு மாற்ற, பரிசீலனை செய்யும்படி கோரிக்கையை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்